×

புதுப்பள்ளி தொகுதியில் உம்மன்சாண்டி மகனை எதிர்க்கும் வேட்பாளர் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதியில் செப்டம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றே காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டிஒய்எப்ஐ) மத்தியக் கமிட்டி உறுப்பினரான ஜெய்க் சி. தாமஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் புதுப்பள்ளியில் நடந்த 2 தேர்தல்களிலும் உம்மன் சாண்டியை எதிர்த்து இவர்தான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post புதுப்பள்ளி தொகுதியில் உம்மன்சாண்டி மகனை எதிர்க்கும் வேட்பாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Umanshandi Magan ,Pudupalli ,Thiruvananthapuram ,Pudupalli constituency ,Kerala ,chief minister ,Ooman Chandy ,Pudupally ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...